நைஜீரியா அரசப் படுகொலைகள்
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
வடக்கு நைஜீரியாவில் அரச படைக்கும் வட நைஜீரியா முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறை படுத்த கூறும் உஸ்தாத் முஹம்மத் யூசுப் தலைமையலான இயக்கம் ஒன்றுக்கும் இடையில் நடை பெற்ற சண்டையில் இதன் தலைவரான உஸ்தாத் முஹம்மத் யூசுப் உட்பட 1000 கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு நடந்த சண்டையில் கொல்லபட்டதாக செய்திகள் குறிபிட்டன-
நேற்று அல் ஜஸீரா தொலை காட்சி இந்த அமைப்பை சார்ந்தவர்கள் என்று சந்தேகபடுபவர்களை அரச படைகள் மிகவும் கொடுரமான முறையில் சுட்டு கொல்லும் Execution-style killing காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது – “போகோ ஹராம்” என்பது உஸ்தாத் முஹம்மத் யூசுபின் தலைமையில் 2002 தொடக்கம் இயங்கிய வாலிபர் அமைப்புக்கு மக்கள் சூட்டிய பெயர் “போகோ ஹராம்” என்பதன் பொருள் மேற்கு கல்வி ஹராம் என்பதாகும் ஆனால் இந்த அமைப்பினர் தமக்கு ஒரு பெயரை சூட்டி கொள்ளவில்லை இவர்கள் அரசை வேண்டியதும் செயல் பட்டதும் வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்த கூறி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் , இவர்கள் வட நைஜீரியாவில் சில போலீஸ் நிலையங்களை தாக்கியதாகவும் பல போலீஸ் நிலையங்களை தாக்குவதற்கு தயார் நிலையில் இருந்ததாகவும் தகவல்கள் குறிபிடுகின்றது ஆனால் நைஜீரியா அரசு இவை கொடுரமான படு கொலைகள் இதை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபடுவார்கள் என்று குறிபிட்டுள்ளது இந்த அரச படைகளின் படுகொலையில் நிராயுத பாணிகளான பொதுமக்கள்தான் அதிகமாக கொல்லபட்டதாக செய்திகள் குறிபிடுகின்றன நைஜீரியா அரச படைகள் சண்டை முடிந்ததன் பின்னர் வீடு வீடாக சோதனை நடத்தி தாம் சந்தேகிக்கும் நபர்களை வீதி ஒன்றில் படுக்க வைத்து சுட்டுகொன்றதாக அல் ஜஸீரா தொலை காட்சி பதிவுகளையும் வெளியிட்டுள்ளது



INSHA ALLAH RETURN COME SOON
SHAMZU MAKKEEN
March 17, 2011 at 3:17 pm