OurUmmah.org

One World One Ummah

கிழக்கு துருக்கி பூகம்பத்தில் இறந்தவர்கள் எண்ணிகை 280 தாக உயர்வு

leave a comment »

OurUmmah: துருக்கி நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்று மாலை மணியளவில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. வான்நகர் அருகேயுள்ள தபாரின் கிராமத்தை மையமாக கொண்டு இந்த ரிக்டர் அளவிலான பூகம்பம் பதிவானது. இதில் இன்று வரை 287 வரையானவர்கள் பலியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் இரண்டு கிழக்கு பிரதேசங்களில் 970 சிறிய பெரிய கட்டிடங்கள் இடிந்துள்ளது. பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்ததை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிவர்களின்   272 பேரின் ஜனாசாக்கள் மீட்கப்பட்டுள்ளன. Read the rest of this entry »

Written by poralikall

October 24, 2011 at 9:04 pm

கேணல் கடாபி: ஒரு சரித்திரத்தின் சரிவு

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்
OurUmmah: 1942 ஆம் ஆண்டு ஜூன், 7ஆம் திகதி பிறந்த கடாபி தனது வாலிப பருவத்தில் இராணுவத்தில் இணைத்தார். அன்றைய லிபிய மன்னரான முஹம்மத் இத்ரீஸ் அஸ்ஸனூஸி என்பவர் சிகிச்சைக்காக துருக்கி சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 1969 ஆம் ஆண்டு தனது 27 வது வயதில் இராணுவ சதிப் புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியை கைப்பற்றினார்.

இவரின் காலத்தில் ரஷிய சோசலிஷம் களந்த அரபு இனத் தேசியவாதத்தை முழங்கியவரான எகிப்திய ஜனாதிபதி -இவரும் இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியவர் – கமால் அப்துல நாசரின் பரந்த அரபு தேசியவாதத்தினால் அல்லது ”நாசரிஷம்” என்று அழைக்கப்பட்ட சோசலிஷமும் அரபு தேசியவாதமும் களந்த விரிவாக

Written by poralikall

October 23, 2011 at 10:02 pm

அந்நஹ்ழா தூனிஸிய தேர்தல் களத்தில் தனது எழுச்சியை பரிசீ லிக்கின்றது

leave a comment »

ஜெஸ்மினா  பாறூக்
OurUmmah: தூனிஸியாவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு 9 மாதங்களில் பின்னர் இன்று பொதுத் தேர்தல் இடம்பெற்றுள்ளது. தூனிஸியாவில் சட்டவாக்க சபைக்கான 217 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 44 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

217 உறுபினர்களை தெரிவு செய்வதற்காக 81 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் 11000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பல ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் சுயேர்ச்சை குழுக்களில் போட்டியிடுகின்றனர். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் நாட்டின் புதிய அரசியல் யாப்பை வரைவார்கள் அதேபோன்று இவர்கள் யாப்பு வரையப்படும் வரை ஒரு இடைக்கால ஜனாதிபதியையும் , நிர்வாகத்தையும் ஏற்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பபட்டுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

October 23, 2011 at 9:50 pm

சர்வாதிகார கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்

with 5 comments

OurUmmah: லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான்.

இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள். லிபியா இன்னொரு ஈராக்காக , ஆப்கானிஸ்தானாக , ஏன் இன்னொரு பாகிஸ்தானாக மாறினாலும் மக்கள் விரும்பும் இஸ்லாமிய புரட்சி தூரமான கனவாகிவிடும். துனூசிய எழுச்சி, எகிப்திய எழுச்சி இரண்டிலிருந்தும் இது வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Written by poralikall

October 21, 2011 at 10:10 am

ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது

leave a comment »

அபூ அய்யூப் முஹம்மத்
OurUmmah: ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது. புதியதோர் எதிர் காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான்: அநியாயக்காரன் இம்மையிலும் மறுமையிலும் எவ்வாறான இழிவுகளை அடைவான் என்பதற்கான மற்றுமோர் உதாரணமே கடாபியின் தோல்வியாகும்.

கடாபியையும் அவனது சர்வாதிகார ஆட்சியையும் இல்லாமல் செய்தமை விசுவாசிகளுக்கு மிகச் சிறப்பான ஒரு செய்தியாகும். وَبَشِّرِ الْمُؤْمِنِينَ 10:87. மேலும்இ நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!’ ஜ10:87ஸ இவன் தனது 42 வருட சர்வாதிகார ஆட்சியில் ஆயிரக்கணக்கானோரை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து விரிவாக

Written by poralikall

October 21, 2011 at 9:32 am

கடாபி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

leave a comment »

OurUmmah: லிபிய தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி போராளிகளினால் கொல்லப்பட்டமையை லிபிய தேசிய கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். இவருடன் பல முக்கிய முன்னாள் அதிகாரிகளும் கொல்லபட்டுள்ளனர். இவரின் ஒரு மகன் பிடிபட்டுள்ள நிலையில் சைபுல் இஸ்லாம் தப்பி சென்றுள்ளதாகவும் கடாபி பிடிபட்டபோது அவருடைய இரு கால்களிலும் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

கடாபியை அகற்றும் போருக்கு அமெரிக்க தலைமையில் மேற்கு நாடுகள் முழு ஆதரவை லிபிய தேசிய கவுன்சிலுக்கு வழங்கி வந்தமை குறிபிடதக்கது 42 ஆண்டுகள் லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி கொல்லப்பட்டு வீதில் வீசப்பட்டுள்ளார் Video Read the rest of this entry »

Written by poralikall

October 20, 2011 at 8:00 pm

கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரதேசவாமும், தேசியவாதமும் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது

leave a comment »

OurUmmah: தமிழ், கிறிஸ்தவ சமூகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றிடம் இவை காணப்படுகின்றது. தமிழ் சமூகம் அதை இனப்பிரச்சினையின் பின்னர் உருவாக்கி கொண்டுள்ளது. கிறிஸ்தவ சமூகம் உலகின் கைத்தொழில் புரட்சிக்கு பின்னரான காலத்திலிருந்து தமது ஆதிக்கத்தை உலகில் நிலைநிறுத்த அப்படியான சர்வதேச வலையமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது .

முஸ்லிம் சமூகத்தில் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் பிரதேசவாதங்களும், தேசியவாதங்களும் தான் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றது. இஸ்லாமிய உம்மத் என்றவகையில் முஸ்லிம் சமூகத்தை ஒழுங்குபடுத்த ஒன்றுபடுத்த செயல்பாடுகளும் விரிவாக

Written by poralikall

October 19, 2011 at 12:38 pm

இஸ்ரேல் 1027 கைதிகளை விடுவிக்க இணங்கியுள்ளது

leave a comment »

இணைப்பு-2: OurUmmah: இஸ்ரேலை சூழவுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி குறிப்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இஸ்ரேலை ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக இஸ்ரேல் 1027 பலஸ்தீன ஆண் , பெண் கைதிகளை விடுவிக்க இங்கியுள்ளது. இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாடு உருவாக்கப்பட்டது முதல் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் எதிலும் பிடிவாதத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது இஸ்ரேல் இந்த நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான பிரதான காரணமாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சி பிரதான காரணமாக சுட்டிக்காட்டப் படுகின்றது .

காஸா பகுதியை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸ் நிர்வாகம் இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்   தான் சிறை பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவனை விடுவிக்க இணங்கியுள்ளது. இஸ்ரேல் முதல் கட்டமாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை Read the rest of this entry »

Written by poralikall

October 18, 2011 at 11:35 am

ஹிட்லரின் மரணம் தொடர்பான புதிய ஆய்வுகள் பல கதைகளை பொய்யென்று நிரூபிக்குமா ?

leave a comment »

OurUmmah: சர்வாதிகா ஹிட்லர் 1945 ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய ஆய்வு நூல் ஒன்று உமை கோருகிறது. தென் அமெக்காவில் வயதாகி ஹிட்லர் இறந்தமைக்கான சான்றுகள் தனக்கும் மேற்படி ஆய்வில் பங்கேற்ற சிமொன் டங்ஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிட்டன் ஊடகவியலாளரான ஜெரார்ட்வில்லியம்ஸ் ஞாயிற்றுக்கிழமை “ஸ்கை- நியூஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெவித்துள்ளார்.

“நாங்கள் வரலாற்றை மீள எழுத விரும்பவில்லை. ஆனால் ஹிட்லர் தப்பிச்சென்றமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை எமக்கு கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன’ என அவர் தெவிக்கிறார் Read the rest of this entry »

Written by poralikall

October 18, 2011 at 7:42 am

‘நம்பிக்கை துரோகி… அரசியல் புரோக்கர்… மோடி ஜால்ரா!’ – ஹஸாரேவுக்கு எதிராக வெடித்தது எதிர்ப்பு

leave a comment »

OurUmmah: ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் அன்னா ஹஸாரேவும் அவரது கோஷ்டியினரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அவரை ஆதரித்தவர்களில் பலரும் அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஹஸாரே எங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டார் என்றும், ஹஸாரே ஒரு நம்பிக்கை துரோகி, அரசியல் புரோக்கர் என்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத் தளங்களில் எதிர்ப்புக் கருத்துக்களை அவரது ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர் Read the rest of this entry »

Written by poralikall

October 13, 2011 at 9:31 am

துருக்கி பிரதமர் ரஜப் தையூப் அர்துகானின் தாயார் வபாத்தானார்

with 3 comments

OurUmmah:துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகானின் தாயாரான டெண்ஜிலே அர்துகான் தனது 88 டாவது வயதில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று துருக்கியின் இஸ்தன்பூல் பாத்தி மஸ்ஜிதில் இடம்பெற்றுள்ளது. அதில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளானர். உலகின் பல இடங்களில் அவருக்காக ஜனாஸா தொழுகை இடம்பெற்றுள்ளது சோமாலியா மக்களும் சோமாலியாவில் பல பிரதேசங்களில் ஜனாஸா தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.Pic,Video Read the rest of this entry »

Written by poralikall

October 9, 2011 at 11:10 pm

முஸ்லிம் கட்சிகள் கூட்டாக விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி

with one comment

OurUmmah: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவற்றுடன் கூட்டிணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். Read the rest of this entry »

Written by poralikall

October 6, 2011 at 9:26 am

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் 18 வீதத்தை மட்டும் சுந்திர நாடக அங்கீகரிக்க கோரும் அப்பாஸ்

with 6 comments

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம்(இஸ்லாஹி)
OurUmmah: அப்பாஸ் வரைந்துள்ள பலஸ்தீனை ஐ.நாவில் ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு கோரிய அவரின் கோரிக்கை நேற்று ஐ.நா பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் அடுத்த வாரம் ஆராயப்படும் என்றும் முடிவாகியுள்ளது.

பலஸ்தீனம் 194 ஆவது நாடாக அங்கீகாரம் பெறவேண்டுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் குறைந்து 9 நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் எந்த நிரந்தர உறுப்பு நாடும்  விட்ரோ- Veto- அதிகாரத்தை பயன்படுத்தி கோரிக்கையை நிராகரிக்காமல் இருக்கவேண்டும் அதன் பின்னர் அந்த கோரிக்கை ஐ.நா. பொது சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெறவேண்டும் அப்போதுதான் அப்பாஸின் முயற்சிக்கு வெற்றி கிட்டும் Read the rest of this entry »

Written by poralikall

October 2, 2011 at 3:31 pm

டாக்டர் அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக யெமனும், அமெரிக்காவும் கூறுகின்றது

leave a comment »

OurUmmah: அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த டாக்டர் அன்வர் அல் அவ்லாகி யெமன் நாட்டில் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பிறந்தவரான அவ்லாகி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து எந்த குற்றங்களும் நிரூபிக்காத நிலையில் அமெரிக்கா இவரை கண்ட இடத்தில் கொலை செய்யுமாறு உத்தர விட்டிருந்தது.

கடந்த ஆண்டு மே மாதமும் இவர் கொல்லப்பட்டதாக யெமனும் அமெரிக்காவும் தெரிவித்தது. பின்னர் அன்வர் அல் அவ்லாகி தானே யெமனில் சில இடங்களில் நேரில் தோன்றி Read the rest of this entry »

Written by poralikall

September 30, 2011 at 8:28 pm

தேர்தல்களை எதிர்கொண்டுள்ள எகிப்து அரசியல் களம் யாருக்கு வெற்றி

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து புரட்சி ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடக்கும் நிலையில் எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெறும் அதை தொடர்ந்து ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் இடம்பெறும் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கான வேட்பாளர் பதிவுகளை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் தேர்தல் அலுவலகத்தில்  மேற்கொள்ளமுடியும் என்று எகிப்தின் இராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 28.09.2011 புதன் கிழமை எகிப்தின் 59 அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் இணைந்து. இராணுவ நிர்வாகம் தேர்தல் சட்டத்தில் மாற்றம் ஒன்றை கொண்டுவரவேண்டும் Read the rest of this entry »

Written by poralikall

September 29, 2011 at 8:42 pm

ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?

with 5 comments

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியுள்ளது அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளை கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது.

ஐ.நா வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது என்றாலும் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க அப்பாஸ் நிர்வாகம் கெஞ்சி கொண்டிருகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

September 28, 2011 at 10:37 pm

முள்ளிவாய்காலில் கடாபி

leave a comment »

OurUmmah: கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லிபியாவின் கடைசி நகரான சிர்தவுக்குள் போராளிகள் படை செவ்வாய்க்கிழமை நுழைந்தது. அந்த நகரின் கிழக்குப் பகுதி துறைமுகத்தை கைப்பற்றியுள்ளனர்.  கடாபியின் வசமிருந்த முக்கிய நகரங்களை அங்கு இப்போது ஆட்சி செய்து வரும் தேசிய இடைக்கால அரசின் (என்டிசி) படை கைப்பற்றியுள்ளது இதேவேளை எல்லோ கேக் என்று குறிபிடப்படும் மிகவும் ஆபத்து விளைவிக்க கூடிய ரேடியோ கதிர் கொண்ட இரசாயன பொருட்களை கொண்ட 10000 பீப்பாய்கள் லிபியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடாபிபிறந்த நகரமான சிர்தே மட்டும் இன்னும் கடாபியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரையும் இப்போது போராளிகள முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். Read the rest of this entry »

Written by poralikall

September 28, 2011 at 10:47 am

சிரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டம்

leave a comment »

OurUmmah: சிரியா அரசுக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டத்தில் இதுவரை 2800 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பஷர் அல் அசத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் மீது அரசு இராணுவ அடக்கு முறையை ஏவி விட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாக்கி வருகின்றது.

இன்று ரஸ்தான் மற்றும் தல்பீசா ஆகிய நகரங்கள் மீது சிரியா இராணுவம் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது பலர் கொல்லப்பட்டுள்ளனர் குறித்த நகரங்கள் சுற்றிவளைக்கப் பட்டு தாக்குதல் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. Read the rest of this entry »

Written by poralikall

September 28, 2011 at 10:23 am

முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் அனுதாபிகள்: FBI போதனை

with 2 comments

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம் (இஸ்லாஹி)

OurUmmah: அமெரிக்க உளவு பிரிவான FBI தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கு போது அமெரிக்காவில் பிரதான, பெரும்பாலான முஸ்லிம்கள் பெரும்பாலும் பயங்கரவாதத்தின் அனுதாபிகளாக இருகின்றார்கள் -main stream” American Muslims are likely to be terrorist sympathizers- இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் “violent” .  போன்ற மிகவும் மோசமான முறையிலான பயிற்சி வழங்கும் முறை அம்பலமாகியுள்ளது.

அதில் அல்லாஹ்வின் தூதரையும் ”வழமைக்கு புறம்பான   நடத்தைகளை கொண்ட மத குழுவின் தலைவர்” – “cult leader” என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்று wired.com என்ற இணையத்தளம் தான் கைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

September 17, 2011 at 10:16 pm

துருக்கிய பிரதமருக்கு எகிப்திய மக்கள் வீர வரவேற்பு

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் சுற்று பயணம் ஒன்றை மேற்கொண்டு எகிப்து வந்துள்ளார். எகிப்து மக்களினால் இவருக்கு வீரனுக்குரிய வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.  எகிப்தில் உரையாற்றியுள்ள பிரதமர் இந்த மாதம் ஐநா சபையில் பலஸ்தீனை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க கோரும் தீர்மானத்துக்கு அனைத்து அரபு நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அரபு முஸ்லிம் நாட்டு மக்கள் பலஸ்தீனை மீட்க வந்த வீரனாக இவரை பார்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர் . பலஸ்தீனை அங்கீகரிப்பது கட்டாயமானது அது ஒரு மிக முக்கியமான விடயம். இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர் ஐநா சபையில் பலஸ்தீன கொடி பறக்கும் என்றும் தெரிவித்துள்ளார் எகிப்தின் Read the rest of this entry »

Written by poralikall

September 14, 2011 at 8:09 pm

இஸ்ரேலுக்கு எதிராக எகிப்திய மக்கள் ஆர்ப்பாட்டம்

leave a comment »

OurUmmah: எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தைப் பொதுமக்கள் தாக்கியுள்ளனர் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இஸ்ரேலின் தூதரகம் அமைத்துள்ள கட்டிடம் மக்களால் சுற்றி வளைத்து தாக்கப்பட்டுள்ளது  முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு, இராணுவம் இடைகால நிர்வாகம்   ஏற்பட்டதன் பின்னர் இஸ்ரேலுடனான உறவுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் இடம்பெற்ற வன்முறையை கண்டித்துள்ளது இதற்கு இடைகால அரசாங்கமும் , இராணுவ நிர்வாகமும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளதுடன் வேகமாக மக்களிடம் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கான கால வரையறை மற்றும் இஸ்ரேல் எகிப்து மீது தாக்குதல்  நடத்தியமைக்கு Read the rest of this entry »

Written by poralikall

September 11, 2011 at 4:20 pm

நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்

leave a comment »

OurUmmah: இஸ்லாம் மிருகங்கள் மீது இறக்கம் காட்டுமாறு போதிக்கின்றது தாகித்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய காரணத்தினால் ஒரு மோசமான விபச்சாரி மன்னிக்கப்பட்டால் என்று இஸ்லாம் கூறி  மிருகங்கள் மீது அன்பும் ,கருணையும் கட்டுமாறு எமக்கு போதிக்கின்றது.

மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது. மிகவும் மோசமாக சித்திர வதைகளை அனுபவிக்கின்றன நாகரிகத்தின் தொட்டில் என்று தம்மை தாமே அழைத்து கொள்ளும் மேற்கு நாடுகளில் கூட்டு மிருக வதைகள் தினமும் இடம்பெறுகின்றது. Video Read the rest of this entry »

Written by poralikall

September 9, 2011 at 8:25 am

அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே யார் இந்த அன்னா ?

with 3 comments

OurUmmah: அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே என்று இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பலர் எழுதினார்கள் எழுதுகின்றார்கள் ஏன் எங்கள் முஸ்லிம் ஊடகங்களும் அன்னா ஹஸாரே என்பவர் மனித சமூகத்தின் விடிவுக்கான உதயாமாகியுள்ள சூரியன் என்று சொல்லாமல் சொன்னார்கள் ஆனால் அவர் RSS பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார் என்ற உண்மைகள் தற்போது வெளியாயுள்ளது.

ஹஸாரேவுக்கு இந்தியாவின் பல பிரதான ஊடகங்கள் மிகவும் முக்கிய இடத்தை வழங்கி மக்களின் உள்ளங்களில் அவரை உயர்ந்த மனிதராக பதிவு செய்யும் திட்டமிட்ட வேலைகளை செய்துவருகின்றது தற்போது இந்தியவில் ஹஸாரேயின் உண்ணாவிரத  போராட்டம் சினிமாப் படமாக மராத்தியில் தயாராகவுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

September 7, 2011 at 5:36 pm

துருக்கி இஸ்ரேலியர்களை வெளியேற்றுகின்றது

with one comment

OurUmmah: கடந்த ஆண்டு காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இரு இலங்கை முஸ்லிம்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர் இது தொடர்பாக துருக்கியின் அழுத்தினால் ஐ.நா குழு விசாரணை நடத்திவந்தது . அந்த விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது அவ்வறிக்கையில் இஸ்ரேல் இராணுவ பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

September 4, 2011 at 9:53 pm

இஸ்ரேல் உத்தியோக பூர்வமாக மன்னிப்பு கோரவேண்டும்: டாக்டர் முஹமத் மோர்சி

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் , நீதிக்குமான கட்சி -Freedom and Justice Party (FJP)- எகிப்தின் உயர்மட்ட இடைக்கால இராணுவ அரச நிர்வாகத்தை -SCAF- சந்தித்து எகிப்திய எல்லை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி மூன்று எகிப்து போலீஸ் அதிகாரிகளை படுகொலை செய்ததுடன் ஐந்து பேரை படுகாயமடை செய்த அத்துமீறல் தாக்குதல் தொடர்பாக பேசியுள்ளது.

இதன்போது சுதந்திரத்துக்கும் , நீதிக்குமான கட்சியின் தலைவர் டாக்டர் முஹமத்  மோர்சி -Dr. Mohamed Morsy- இஸ்ரேல் உத்தியோக பூர்வமாக மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இஸ்ரேலின் அத்துமீறிய தாக்குதல் தொடர்பாக வெளிப்படையான  விசாரணை விரைவான நடத்தபடவேண்டும் என்றும் கோரியுள்ளார். Read the rest of this entry »

Written by poralikall

August 26, 2011 at 11:55 pm

லிபிய போராளிகள் தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியுள்ளனர்

leave a comment »

OurUmmah: லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியிலுள்ள சதுக்கத்தினை -Libyan rebels in Tripoli’s central square- லிபிய போராளிகள கைப்பற்றியுள்ளனர் கடாபியின் ஆதிக்கம் எஞ்சியுள்ள பாப் அல் அஸிஸியா  நகரை தவிர அனைத்து பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக போராளிகள தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியதை தொடர்ந்து வீதிகளில் பெருந்திரளான மக்கள் மகிழ்ச்சி ஆரவரங்களில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.video Read the rest of this entry »

Written by poralikall

August 22, 2011 at 7:43 am

இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது

leave a comment »

OurUmmah: இஸ்ரேல் காஸா மீது விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளது, இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலின் தெற்கு பகுதியான எய்லட் பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினரை ஏற்றிவந்த பஸ்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு தாக்குதலுக்குதளை தாம் நடத்தவில்லை என்று காஸாவை ஆளும் ஹமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ள போதும் இஸ்ரேல் விமாங்கள் காஸா மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

August 19, 2011 at 9:22 am

சிரிய இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 2000 மக்கள் கொல்லப்பட்துள்ளனர்

leave a comment »

OurUmmah: சிரியா அஸத் அல் பஷீர் அரசு தனது மக்களுக்கு எதிரான கடுமையான அடக்கு முறைகளை கையாண்டு வருகின்றது. கடந்த மார்ச் மாதம் தொடக்கம் சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையை சிரியா சந்திக்கும்போதும் அதன் வேகம் இரட்டிப்பாகி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அஸத் அல் பஷீர் அரசு கடந்த புதன் கிழமை பலஸ்தீனர்களின் அகதி முகாம் அமைந்துள்ள கரையோர பிரதேசமான லடகியா மீது பாரிய இராணுவ தாக்குதலை ஆரமித்தது நடாத்தி வருகின்றது. குறிப்பாக பலஸ்தீன அகதி முகாம் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. Video Read the rest of this entry »

Written by poralikall

August 17, 2011 at 2:29 pm

ரமழான் கண்ட பத்ர் களம்

leave a comment »

OurUmmah: இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். இந்த போர் இஸ்லாமிய வரலாற்றில் முதல் போராகும் போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த போர் . இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடைபெற்றுள்ளது.

உண்மையில் இந்த களத்தில் கொள்கைக்காக இரத்த உறவுகள் தமக்குள் மோதிகொண்டது. தந்தையும் மகனும் மோதிக்கொண்டனர், சகோதரர்கள் மோதிக்கொண்டனர், நண்பர்கள் மோதிக்கொண்டனர் இந்த யுத்தத்தில் முஸ்லிம்கள் கொள்கைக்காக இரத்த உறவுகளை களத்தில் சந்தித்தனர். Video Read the rest of this entry »

Written by poralikall

August 17, 2011 at 1:25 pm

ரமதான் தக்வாவின் மாதம் மாத்திரமல்ல

leave a comment »

முஹம்மது இஸ்மாயில்
OurUmmah: ரமதான் தக்வாவின் மாதம் மாத்திரமல்ல, பெற்றுக் கொண்ட தக்வாவைக் கொண்டு பல வெற்றிகளையும்; பெற்றுக் கொண்ட மாதம்:இஸ்லாமிய மார்க்கம் பூமியில் நிலை பெறுவதற்கும் தலைத் தோங்குவதற்குமான வெற்றிகள் பல, புனிதம் நிறைந்த இந்த ரமதான் மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளன என்பது இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நாம் அறிகின்ற பேருண்மையாகும்.

• இஸ்லாத்தின் முதல் யுத்தமும் முதல் வெற்றியுமான ‘பத்ரு’ப் போர் நிகழ்ந்தது ரமதான் 17ம் நாளிலாகும். Read the rest of this entry »

Written by poralikall

August 17, 2011 at 12:56 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers